×

சென்னை கிரைம்

* அம்பத்தூர் காந்தி நகர் ரயில் விஹார் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி ராதாகிருஷ்ணன் (65) என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து, 5 சவரன் நகை, ரூ1.2 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
* புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சேர்ந்த ஓசைமணி (23) என்பவரை முன்விரோத தகராறில் அரிவாளால் வெட்டிய, அயனாவரம் எஸ்.வி.எம்.நகரை சேர்ந்த சூர்யா, சத்யா மற்றும் ஜீவா உள்ளிட்ட 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
* கே.கே.நகர் விஜயராகவபுரம் பகுதியில் கத்தியுடன் திரிந்த மணிகண்டன், தினேஷ், பாலாஜி ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* திருவல்லிக்கேணி சுதந்திரா நகர் 2வது தெரு, லாயிட்ஸ் ரோடு பகுதியை சேர்ந்த மாநகராட்சி துப்புரவு ஊழியர் மீனாட்சி (57), நேற்று காலை மந்தைவெளி பஸ் நிலையம் அருகே பணியில் இருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்.
* ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரில் கஞ்சா விற்ற பர்னாட்டி (65) என்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

* ஓட்டேரி மங்கலபுரத்தை சேர்ந்த அப்துல் ஜாபர் என்பவரிடம் ரூ2 ஆயிரத்தை பறித்து சென்ற பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த விஜய் (26), ஓட்டேரி செமாத்தம்மன் காலனியை சேர்ந்த அருண் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.   * அயனாவரம் மேட்டு தெருவை சேர்ந்த கலைச்செல்வன் என்பவரின் மனைவி கல்யாணி. கணவன் மதுப்பழக்கத்தை கைவிடாததால் மனமுடைந்த கல்யாணி நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...