×

மயிலாப்பூர், மெரினாவில் திருடுபோன 160 செல்போன்கள் கேரளாவில் மீட்பு: உரியவர்களிடம் ஒப்படைப்பு

சென்னை: மெரினா, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மந்தைவெளி போன்ற பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக 160க்கும் மேற்பட்டோரிடம் செல்போன்கள் திருடு போனதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, துணை ஆணையர் சேகர் தேஷ்முக் உத்தரவின்பேரில் ராயப்பேட்டை உதவி ஆணையர் பாஸ்கர், மயிலாப்பூர் உதவி ஆணையர் நெல்சன் மற்றும் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். திருடுபோன செல்போன்களின் ஐஎம்இஐ எண்களை வைத்து விசாரித்தபோது, கேரளாவில் உள்ள ஒரு முகவரிடம் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து  தனிப்படை போலீசார் கேரளா சென்று சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து 160 செல்போன்களை மீட்டனர். விசாரணையில், இந்த செல்போன்கள் பீகார் மற்றும் பல்வேறு வடமாநில பகுதிகளில் உள்ள கடைகளுக்கு அனுப்பி விற்க முயன்றது தெரிந்தது. மீட்டு சென்னை கொண்டு வரப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன.

Tags : Mylapore ,Marina ,Kerala ,
× RELATED சென்னை மயிலாப்பூரில் இருசக்கர...