×

முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 28 ஊராட்சி துணைத்தலைவர்கள் தேர்வு கோவிலூர் ஊராட்சி தேர்தல் ஒத்திவைப்பு

முத்துப்பேட்டை, ஜன.12: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 29ஊராட்சி ஊராட்சிகளுக்கு துணைத்தலைவர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.
இதில் மேலநம்மங்குறிச்சி திருமுருகன், கீழநம்மங்குறிச்சி கஜேந்திரன், தம்பிக்கோட்டை துர்காதேவி, ஜாம்புவானோடை ராமஜெயம், உதயமார்தாண்டபுரம் புவனேஸ்வரி, குன்னலூர் கதிர்வேல், எடையூர் மஞ்சுளா, உப்பூர் இந்துமதி, ஆலங்காடு பிரவீன்குமார்கீழபெருமழை குமார்வடசங்கேந்தி சுமதி, ஆரியலூர் சுமதி, இடும்பாவனம் சீதா, தொண்டியக்காடு சுமதி, கற்பகநாதர்குளம் தவமணி, தோலி ஆனந்தி, ஓவரூர் ரமேஷ், வேப்பஞ்சேரி லதா, சங்கேந்தி ஜெயலட்சுமி, பின்னத்தூர்செங்குட்டுவன், மருதவனம் கஸ்தூரி, வங்கநகர்செல்வராணி, பாண்டி நிவாசன், மாங்குடி ரவீந்திரன், கல்லுக்குடி அமுதா, விளாங்காடு முருகையன், தில்லைவிளாகம் ராஜ்குமார், மேலபெருமழை சங்கீதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கோவிலூர் ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடாததால் அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் 28ஊராட்சிகளிலும் தேர்வு பெற்ற துணைத்தலைவர்களில் பெரும்பாலானோர் திமுக ஆதரவாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...