×

பொன்னமராவதி ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் துணைதலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

பொன்னமராவதி, ஜன.12: பொன்னமராவதி ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளின் துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் 42 கிராம ஊராட்சித் தலைவர்கள் கடந்த 6ம்தேதி பொறுப்பேற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து நேற்று 11ம் தேதி துணைத் தலைவர்கள் தேர்தல் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நடைபெற்றது. இதில் செம்பூதி, மேலமேலநிலை, கூடலூர் ஆகிய மூன்று ஊராட்சிகளில் யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் துணைத்தலைவர்கள் கேட்டதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட 39 ஊராட்சிதுணைத் தலைவர்கள் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags : Vice President ,election ,
× RELATED நகை வழிப்பறி செய்த வழக்கில் பா.ஜ.க பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை..!!