×

தா.பழூர் ஒன்றியத்தில் 3 ஊராட்சியில் தேர்தல் நிறுத்தி வைப்பு

தா.பழூர், ஜன. 12:அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் கடந்த 30ம்தேதி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு 2ம் தேதி வாக்கு எண்ணப்பட்டு வெற்றி அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒன்றியத்திற்குட்பட்ட 33 ஊராட்சிகளிலும் தேர்தல் நடத்தப்பட்டு வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் நேற்று அனைத்து ஊராட்சிகளிலும் துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் மூன்று ஊராட்சிகளில் மட்டும் வார்டு உறுப்பினர்கள் வராததால் கார்குடி ,காடுவெட்டாங் குறிச்சி, சாத்தாம்பாடி உள்ளிட்ட ஊராட்சிகளில் தற்காலிகமாக தேதி குறிப்பிடாமல் துணைதலைவருக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags : Elections ,Palur Union 3 ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...