×

பொறையாரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தரங்கம்பாடி, ஜன.12: நாகை மாவட்டம், பொறையார் டி.பி.எம்.எல் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், போராடிய டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டித்தும் நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் வட்டத் தலைவர் மகேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அமுல் காஸ்ட்ரோ, மாவட்ட துணை செயலாளர் ஐயப்பன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். வகுப்புகளை புறக்கணித்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்று மத்திய மோடி அரசுக்கு எதிராக தொடர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags : College students ,
× RELATED ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம்...