×

டெல்லி பல்கலையில் மாணவர்கள் மீது தாக்குதல் கண்டித்து கரூரில் இளைஞர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூர், ஜன. 12: டெல்லி பல்கலை.மாணவர்களை தாக்கியவர்களை கைது செய்யாமல் இருப்பதைக் கண்டித்து இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டெல்லி ஜவகர்லால்நேரு பல்கலைக்கழக மாணவர்கள் பேராசிரியர்களை தாக்கிய ஆர்எஸ்எஸ், ஏபிவிபி, பயங்கரவாதிகளை கைது செய்யக்கோரி கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் லட்சுமிகாந்தன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகக்குழு ரவி, இந்திய கம்யூ மாவட்ட செயலாளர் ரத்தினம், ஏஐடியூசி வடிவேலன், ராஜேந்திரன், மோகன்குமார், பாலகிருஷ்ணன், சிவகுமார், ரமேஷ், சக்திவேல் உள்ளிட்டோர் பேசினர்.

Tags : Karur ,Delhi ,
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...