×

கட்டண கழிப்பிடம் சீரமைக்க கோரிக்கை

திருப்பூர்,ஜன.12: திருப்பூர் மாநகராட்சி 45வது வார்டு ராயபுரம் பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள்,  பின்னலாடை நிறுவனங்கள் உள்ளன. பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் வசிக்கும் பகுதியில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் கட்டண கழிப்பிடம் செயல்படுகிறது. இதில், ராயபுரம் பகுதியிலுள்ள கழிப்பிடத்தை சுற்றிலும் பல்வேறு செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. மேல்நிலைத் தொட்டியிலிருந்து கசிந்த தண்ணீர் சுவர்களில் சென்று பாசம் பிடித்துள்ளது.
 கழிப்பிடத்தை சுற்றிலும் கற்கள் பெயர்ந்து உள்ளே செல்ல முடியாத நிலையுள்ளது. கதவுகள் உடைந்து துருப்பிடித்துள்ளது. சகிக்க முடியாத துர்நாற்றத்தை சகித்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. சுகாதாரமற்ற கழிப்பிடத்திற்கு கட்டணம் வசூலித்தும் அடிப்படை வசதிகள் இல்லாத அவலநிலை உள்ளது. ராயபுரம் கட்டண கழிப்பிடத்தை மராமத்து பணிகள் செய்ய வேண்டுமென மாநகராட்சி கமிஷனருக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...