×

திருப்பூர் குமரன் 88வது நினைவுதினம் அனுசரிப்பு

திருப்பூர், ஜன.12:  சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 88ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
போராட்டத்தின்போது காவலர்களின் தாக்குதலில் அடிபட்டு உயிர்நீத்தவர் திருப்பூர் குமரன்.  இதனடிப்படையில் ஆண்டுதோறும் ஜனவரி 11ம் தேதி அவரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சமிதியின் சார்பில்,  திருப்பூர், ரயில் நிலையம் எதிரில் உள்ள குமரன் நினைவகத்தில் உள்ள அவரது சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும், அவரது நினைவு ஸ்தூபி சுத்தம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.இதேபோல், தமிழ்நாடு குடிமக்கள் பாதுகாப்பு மையம் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பள்ளி மாணவர்கள் அமைதி பேரணி நடத்தினர். மேலும், பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள் சார்பில் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளி மாணவ, மாணவியரும் குமரன் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags : Tirupur Kumaran ,
× RELATED வேட்பாளர் மாலை அணிவித்தபோது...