×

பூங்கா நடைபாதையில் விபத்து அபாயம்

ஊட்டி, ஜன. 12:ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். இவர்களில், சுற்றுலா பயணிகள் சாலையோர நடைபாதையையே பயன்படுத்துகின்றனர். இதுமட்டுமின்றி, உள்ளூர் மக்கள் பலர் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், காதுகேளாதோர் பள்ளி வளாகத்தை ஒட்டி சில ராட்சத கற்பூரம் மற்றும் சாம்பிராணி மரங்கள் வளர்ந்துள்ளன.  இந்த மரங்கள் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் என்பதால், தற்போது சாய்ந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன. பலமான காற்று அடித்தால் இந்த மரங்கள் விழும் நிலையில் உள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி