×

மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு, ஜன. 12: சத்தியமங்கலம் இந்திரா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி இந்திராணி (62). முதுமை காரணமாக கடந்த சில மாதங்களாக நோயால் இந்திராணி அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் யாரிடமும் பேசாமல் தனிமையில் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த இந்திராணி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை