×

பணம் கேட்டு மிரட்டியவர் கைது

ஈரோடு, ஜன. 12:  ஈரோடு ஈஸ்வரன் கோயில் வீதியை சேர்ந்தவர் சதீஸ்குமார் (40). இவர் நேற்று ஈரோடு மரப்பாலம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். இதற்கு சதீஸ்குமார் மறுக்கவே பணம் கொடுக்காவிட்டால் அடித்து கொலை செய்து காவிரி ஆற்றில் வீசி விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சதீஸ்குமார் ஈரோடு டவுன் போலீசில் புகார் செய்ததையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மிரட்டல் விடுத்த ஈரோடு காளைமாட்டு சிலை ஈஸ்வரன் வீதியை சேர்ந்த சங்கர் மகன் தமிழ் அரசன்(26) என்பவரை கைது செய்தனர்.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை