ஈரோடு, ஜன. 12: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகவான் காலனி மலையாம்பட்டியை சேர்ந்தவர் வடிவேல் (60). கட்டிட தொழிலாளி. இவர் ஈரோடு-சத்தி ரோட்டில் சாந்தி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் கட்டுமான பணியில் கடந்த மாதம் 19ம் தேதி ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாரதவிதமாக கட்டிட கம்பி சரிந்து வடிவேல் தலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த வடிவேலுவை சக தொழிலாளர்கள் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை வடிவேல் உயிரிழந்தார். இது குறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.