×

நாமக்கல் மாவட்டத்தில் 10 ஒன்றியங்களை அதிமுக கைப்பற்றியது

நாமக்கல், ஜன.12: நாமக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களில், 10 ஒன்றியங்களை அதிமுக கைப்பற்றியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களில், தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. இதில் பரமத்தி ஒன்றியத்தில் உறுப்பினர்களின் கோரம் இல்லாததால் தேர்தல் நடைபெறவில்லை. 10 ஒன்றியங்களை அதிமுக கைப்பற்றியுள்ளது. அங்கு தேர்வு செய்யப்பட்ட ஒன்றியக்குழு தலைவர்கள் விபரம்: நாமக்கல் சுமதி, பள்ளிபாளையம் தனலட்சுமி, வெண்ணந்தூர் தங்கம்மாள், எருமப்பட்டி வருதராஜ், நாமகிரிப்பேட்டை ராஜேந்திரன், கொல்லிமலை மாதேஸ்வரி. மோகனூர் சரஸ்வதி, கபிலர்மலை ரவி, புதுச்சத்திரம் சாந்தி, எலச்சிப்பாளையம் ஜெயசுதா ஆகியோர்.

திமுக 3 ஒன்றியங்களை கைப்பற்றியுள்ளது. ஒன்றிய குழுதலைவர்கள் விபரம் விபரம்: திருச்செங்கோடு ஒன்றியக்குழு தலைவராக சுஜாதா, ராசிபுரம் ஜெகநாதன், சேந்தமங்கலம் மணிமாலா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மல்லசமுத்திரம் ஒன்றிய குழுத்தலைவராக சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அலமேலு, அதிமுக உறுப்பினர்களின் ஆதரவுடன் தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.

Tags : AIADMK ,unions ,Namakkal district ,
× RELATED தடையை மீறி இறைச்சி விற்பனை