×

நல்லம்பள்ளி ஒன்றியக்குழு தலைவராக பாமக வெற்றி

தர்மபுரி, ஜன.12: நல்லம்பள்ளி ஒன்றியக்குழு தலைவராக பாமகவை சேர்ந்த மகேஸ்வரி தேர்வு செய்யப்பட்டார்.
நல்லம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர், துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. காலை 9.30 மணியளவில், நல்லம்பள்ளி பிடிஓ அலுவலகத்தில் உள்ள போலீஸ் பாதுகாப்பை, எஸ்பி ராஜன் நேரில் பார்வையிட்டார். காலை 11 மணிக்கு பிடிஓக்கள் அருண்மொழித்தேவன், ஷகிலா ஆகியோரிடம், தலைவர் பதவிக்கு ரம்யாதேவி மற்றும் மகேஸ்வரி ஆகியோர் மனு அளித்தனர். இதையடுத்து மறைமுக தேர்தல் நடந்தது. இதில் 18 உறுப்பினர்கள் மகேஸ்வரிக்கும், 11 உறுப்பினர்கள் சத்தியப்பிரியாவிற்கும் வாக்களித்தனர். இதையடுத்து மகேஸ்வரி வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவித்தனர். இதே போல் துணை தலைவராக அதிமுகவை சேர்ந்த ராஜேஸ்வரி 19 வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி பெற்ற இருவருக்கும், கட்சியினர் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Nallampalli Union Committee Chairman ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா