×

செய்யாறு அருகே துணிகரம் ஆசிரியையிடம் 4 சவரன் தாலிச்சரடு வழிப்பறி

செய்யாறு, ஜன.12: செய்யாறு டவுன், திருவத்தூர் குமரன் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி சுஜாதா(42). இவர் கோவிலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ஆசிரியை சுஜாதா நேற்று மாலை பள்ளி முடிந்ததும், தனது மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அனக்காவூர் கோயில் சாலை, தட்டசந்தாங்கல் கிராமம் அருகே சென்றபோது, அவருக்கு பின்னால் 2 நபர்கள் பைக்கில் வந்த கொண்டிருந்தனர். அதில் ஒருவன் திடீரென சுஜாதாவின் கழுத்தில் இருந்த 4 சவரன் தாலிச்சரடை பறித்து கொண்டான். இதனால் அதிர்ச்சியடைந்த சுஜாதா திருடன், திருடன் என கூச்சல் போட்டார். ஆனால், பைக் ஆசாமிகள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து சுஜாதா அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : teacher ,
× RELATED அரசு ஊழியர்கள் மீது கரிசனை போல...