×

இரு குழந்தைகளுடன் தாய் மாயம்

நாங்குநேரி, ஜன. 12: நாங்குநேரி  அருகே நகை, பணம் மற்றும் இரு குழந்தைகளுடன் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
 நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகேயுள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் பரமசிவன் (32). விவசாயி. இவரது மனைவி  சுப்புலட்சுமி (29). தம்பதிக்கு முத்துவர்ஷினி(4), பாலசுர்ஜித் என இரு பிள்ளைகள். கடந்த 8ம்  தேதி வயலுக்குச்  சென்ற பரமசிவன் பின்னர் வீடு திரும்பியபோது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லை. மேலும் பீரோவில் வைத்திருந்த ரூ.23 ஆயிரமும் மாயமாகியிருந்தது.  சுப்புலட்சுமி 7 பவுன் நகையும் முத்துவர்ஷினி  2 பவுன் நகைகளும் அணிந்திருந்தனர். யாரோ ஒருவர் காரில் வந்து தாயையும் குழந்தைகளையும் அழைத்துச் சென்றதாக பரமசிவனிடம் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் எவ்வித தகவலும் இல்லை. இதுகுறித்த புகாரின் பேரில் மூன்றடைப்பு எஸ்ஐ பார்த்தீபன் வ்ழக்குப் பதிந்து, மாயமான மூவரையும் தேடி வருகிறார்.

Tags :
× RELATED ஆலங்குளம் அருகே கடன் தொல்லையால் பெண் தற்கொலை