×

தூத்துக்குடியில் மகனுக்கு ஹெல்மெட் அணிந்து வந்த சிஐஎஸ்எப் வீரருக்கு எஸ்பி பாராட்டு

தூத்துக்குடி, ஜன.12:தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., அருண்பாலகோபாலன் நேற்று காலை தூத்துக்குடி பீச் ரோட்டில் வந்தார். அப்போது பைக்கில் சென்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர் விவேக், தனது 5வயது மகனான ராவன்குமாருடன் ஹெல்மெட் அணிந்து பயணித்ததை கண்டார்.ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதுடன், சட்டத்தை மதித்து தானும் ஹெல்மெட் அணிந்து, தன்னுடைய மகனுக்கும் ஹெல்மெட் அணிவித்து சென்ற மத்திய பாதுகாப்பு படை வீரரை எஸ்பி அருண்பாலகோபாலன் பாராட்டினார். இதுபோன்று அனைவரும் ஹெல்மெட் அணிந்து பயணிக்கவேண்டும் என்பதை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு தூத்துக்குடி தென்பாகம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரேமா பரிசு வழங்கினார்.

Tags : SP ,player ,CISF ,Thoothukudi ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்