×

தூத்துக்குடி சுரேஷ் அகாடமி மாணவி குரூப் 1 தேர்வில் சாதனை

தூத்துக்குடி, ஜன. 12: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்தது. இதில் 670க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். கடந்த டிசம்பர் மாதம் நேர்காணல் நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் ஜன. 6ம்தேதி வெளியிடப்பட்டது. இதில் மாணவி துர்க்காதேவி (26) காவல் துறை துணை கண்காணிப்பாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  துர்க்கா தேவி சாத்தான்குளம் அருகே பெருமாள்குளம்  கிராமத்தை சேர்ந்தவர். ஆரம்ப கல்வியை தனது கிராமத்தில் பயின்றார். மேல்நிலை மற்றும் தொலை தூரகல்வியில் பிஏ தமிழ் பயின்றார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் சுரேஷ் அகாடமியில் பயின்று குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று நெல்லை வணிகவரித்துறையில் பணி புரிகிறார். தற்போது குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று துணை கண்காணிப்பாளர் பணியிடம் பெற்றுள்ளார். மாணவி துர்க்காதேவி தனக்கு பயிற்சி கொடுத்த சுரேஷ் அகாடமி நிறுவனத்துக்கும், நிறுவனர் சுகேஷ் சாமுவேல் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்து அகாடமியின் பணிகள் தொடர வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags : Thoothukudi Suresh Academy Student Group 1 ,
× RELATED சாலை வளைவில் அபாய பள்ளம் சீரமைப்பு