×

தியேட்டர் ஊழியரிடம் டிக்கெட், பணம் பறிப்பு

புதுச்சேரி, ஜன. 12:  தியேட்டர் ஊழியரிடம் டிக்கெட், பணம் பறித்த 6 ேபர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். புதுவை திருபுவனை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார்(44). மூலகுளம் தியேட்டரில் டிக்கெட் விநியோகஸ்தராக உள்ளார். இங்கு மேலாளராக பணியாற்றி வருபவர் அன்பழகன். இவர் மூலகுளத்தை சேர்ந்த ஷாஜகான், நூர் முகமது ஆகியோரிடம் சமீபத்தில் பணம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த பணத்தை கேட்டு சம்பவத்தன்று ஷாஜகான் தனது நண்பர்கள் 6 பேருடன் தியேட்டருக்கு வந்து நீண்டநேரமாக காத்திருந்த நிலையில், அன்பழகன், தான் வெளியே இருப்பதாக கூறி செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த ஷாஜகான், நூர்முகமது மற்றும் அவர்களது கூட்டாளிகள் தியேட்டர் டிக்கெட் அறைக்குள் புகுந்து அங்கிருந்த டிக்கெட்டுகளை எடுத்து விற்றதோடு, ரூ.7 ஆயிரம் ரொக்கத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தியேட்டர் ஊழியர் அசோக்குமார், ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஷாஜகான், நூர்முகமது உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags : theater staff ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...