×

ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு கத்திக்குத்து

புவனகிரி, ஜன. 12: பரங்கிப்பேட்டை அருகே தீர்த்தாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (27). இவர் தீர்த்தாம்பாளையம் கிராம ஊராட்சியில் வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே தெருவில் வசிக்கும் ராமச்சந்திரன் (42) என்பவரும் வேறொரு வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றார். இந்நிலையில் நேற்று ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல் நடந்தது. இதில் போட்டியிட்ட ராமச்சந்திரனுக்கு முருகன் வாக்களிக்கவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக நேற்றிரவு இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ராமச்சந்திரன் முருகனை கத்தியால் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த முருகன் சிகிச்சைக்காக அண்ணா மலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த பரங்கிப்பேட்டை போலீசார் முருகனை கத்தியால் குத்திய ராமச்சந்திரன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Panchayat Ward ,
× RELATED போலி பட்டா தயார் செய்த பாஜ நிர்வாகி மீது வழக்கு