×

சீரமைக்காத அதிகாரிகளை கலாய்த்து முகநூலில் வைரல் திருவாரூரில் மின்னணு வாக்கு இயந்திரத்தை தடை செய்யக் கோரி பிரசாரம்

திருவாரூர், ஜன.10: மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை தடை செய்ய கோரி திருவாரூரில் நேற்று விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் மோசடி நடைபெறுவதாகவும், அதன் மூலம் பிஜேபி 2வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளதாகவும், எனவே இந்த மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தினை தடை செய்ய கோரி பகுஜன் கிராந்த்தி மோர்ச்சா என்ற அமைப்பு சார்பில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்று வருகிறது.

அதன்படி திருவாரூரில் நேற்று பழைய பேரூந்து நிலையம் முன் நடைபெற்ற பிரசாரத்தை விடுதலை சிறுத்தை கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் வடிவழகன் துவக்கி வைத்தார். இதில் மேற்படி அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாதவன், மாநில செயலாளர் விக்கிசவுத்திரி மற்றும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு இயக்க மாநிலத் தலைவர் வரதராஜன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட பொருளாளர் பத்மநாபன், நாம் தமிழர் கட்சி நகரச் செயலாளர் பாலா, விடுதலை சிறுத்தை கட்சி நகர செயலாளர் கபிலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Campaign ,Viral Thiruvarur ,
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-வது கட்ட...