×

நாளை நடக்கவிருந்த எஸ்ஐ எழுத்து தேர்வு தேதி மாற்றம்

கரூர், ஜன. 10: எஸ்ஐ எழுத்துத்தேர்வு துறை சார்ந்த நபர்களுக்கு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள 2019ம் ஆண்டிற்கான காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத்தேர்வில், துறை சார்ந்த நபர்களுக்கு வரும் 11ம் தேதி (நாளை) நடக்கவிருந்த எழுத்துத்தேர்வானது சில நிர்வாக காரணங்களினால் 13ம் தேதிக்கு (திங்கள்) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தனிநபர்களுக்கு (ஓபன் கேன்டிடேட்ஸ்) 12ம் தேதி நடைபெற இருந்த எழுத்துத்தேர்வில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை கரூர் மாவட்ட எஸ்பி பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED வங்கியாளர்கள் கண்காணிக்க வேண்டும்...