×

சிவகிரி அருகே நிலத்தகராறில் தந்தையை அடித்து கொன்ற மகன்

புளியங்குடி, ஜன. 10:  சிவகிரி அருகே தேவிப்பட்டினம் நடுவூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் வேல்சாமி (63). இவருக்கு முருகன் (43), பாலசுப்பிரமணியன் (40) என்ற மகன்களும், கணபதி அம்மாள் (38) என்ற மகளும் உள்ளனர். வேல்சாமிக்கு சொந்தமான 30 ஏக்கரில், 10 ஏக்கரை முருகனிடமும், மற்றொரு 10 ஏக்கரை பாலசுப்பிரமணியனிடம் விவசாய செய்ய கொடுத்து உள்ளார். மீதமுள்ள 10 ஏக்கரை பாலசுப்பிரமணியனிடம் ரூ.1.50 லட்சம் வாங்கிக் கொண்டு விவசாய பணிக்கு கொடுத்துள்ளார். இதுதொடர்பாக முருகனுக்கும், வேல்சாமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று வேல்சாமி, தனது 2வது மருமகள் செல்வபிரியாவுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். தேவிபட்டினம் கிருஷ்ணன் கோயில் அருகே வரும்போது மறைந்திருந்த முருகன், வழிமறித்து கட்டையால் வேல்சாமி தலை மற்றும் மார்பில் தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு ராஜபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த சிவகிரி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அந்தோணி, எஸ்ஐ மாரியப்பன் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து முருகனை கைது செய்தனர்.

Tags : Nilakathakaram ,Sivagiri ,
× RELATED குட்கா விற்ற மூதாட்டி உட்பட 2 பேர் கைது