×

தூத்துக்குடியில் எஸ்ஐ எழுத்து தேர்வு தேதி மாற்றம்

தூத்துக்குடி, ஜன.10:தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் 969 போலீஸ் எஸ்ஐகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் 11ம்தேதி ஏற்கனவே போலீசில் பணியாற்றி வரும் விண்ணப்பதாரர்களுக்கும், 12ம்தேதி புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது போலீசில் பணியாற்றி வரும் விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு மட்டும்  13ம்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 12ம்தேதி பொதுப்பிரிவினருக்கான தேர்வு 4 மையங்களிலும், 13ம்தேதி போலீசில் பணியாற்றி வரும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மையத்திலும் தேர்வு நடக்கிறது.தமிழ்நாடு காவல்துறையில் எஸ்ஐக்களுக்கான எழுத்து தேர்வு தூத்துக்குடியில் விண்ணப்பதாரர்களில் பதிவு எண் 3150001 முதல் 3150465 வரையுள்ள 465 ஆண் விண்ணப்பதாரர்கள் மற்றும் பதிவு எண் 8150001 முதல் 8150100 வரையுள்ள 100 பெண் விண்ணப்பதாரர்கள் மொத்தம் 565 துறை விண்ணப்பதாரர்களுக்கு 11ம்தேதி நடைபெறுவதாக இருந்த எஸ்ஐக்களுக்கான எழுத்துத்தேர்வு தேதி மட்டும் மாற்றம் செய்யப்பட்டு 13ம்தேதி நடைபெறும். எழுத்து தேர்வு மையம் ஹால்டிக்கெட்டில் உள்ளவாறு தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் நடைபெறும். பொது விண்ணப்பதாரர்கள் பதிவு எண். 3110001 முதல் 3113252 வரையுள்ள 3252 ஆண் விண்ணப்பதாரர்கள் மற்றும் 811001 முதல் 8110695 வரையுள்ள 695 பெண் விண்ணப்பதாரர்கள் மொதம் 3947  பொது விண்ணப்பதாரர்களுக்கு 12ம்தேதி தூத்துக்குடி பி.எம்.சி பள்ளி, புனித மரியன்னை கல்லூரி, செயிண்ட் தாமஸ் பள்ளி மற்றும் விகாசா பள்ளி ஆகிய 4 இடங்களில் நடைபெறும் என எஸ்பி அருண்பாலகோபாலன் தெரிவித்துள்ளார்.

Tags : SI Character Exam Date ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...