×

சுப்ரமண்யா கல்லூரியில் பரிசளிப்பு விழா

பழநி, ஜன. 10: பழநி அருகே தாழையூத்து சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கீரனூர் சன்மார்க்க குருகுலம் சார்பில் திருவருட்பா ஒப்புவித்தல் போட்டி, பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் சுப்ரமணி தலைமை வகித்தார். செயலர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். முதல்வர் சங்கர்அழகு வரவேற்று பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Gifting ceremony ,Subramanya College ,
× RELATED மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா