×

தொடர்ந்து மதுவிற்பனை குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

திண்டுக்கல், ஜன. 10: பழநி அருகே ஆண்டிபட்டி குதிரையாறு அணை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் தொடர்ந்து அப்பகுதியில் மது பாட்டில்களை சில்லரை விற்பனை செய்து வந்தார். இதுகுறித்து பழநி மதுவிலக்கு போலீசார் முருகனை பலமுறை கைது செய்தனர். இந்நிலையில் முருகன் மீண்டும் அதே பகுதியில் மதுபான விற்பனையை தொடர்ந்து செய்து வந்தார். இதையடுத்து போலீசார் அவரை கடந்த 2010 டிச.19ல் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவரை திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் விஜயலட்சுமிக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் முருகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

Tags :
× RELATED உர பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் உத்திகள்: வேளாண்துறை அட்வைஸ்