×

பிக்கப் வேன் மோதி கறிக்கடை தொழிலாளி பலி

ஆட்டையாம்பட்டி, ஜன.10: ஆட்டையாம்பட்டி அருகிலுள்ள பூலாவரி தம்பநாயக்கன்பட்டி அடுத்த ஊஞ்சக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் வெங்கடாசலம்(28). இவர் இதே பகுதியில் செங்கல் சூளையில் லோடு டிரைவராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று மதியம் பூலாவரிலிருந்து இளம்பிள்ளைக்கு பிக்கப் வேனில் செங்கல் லோடு ஏற்றி சென்று இறக்கி விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, கல்பாரப்பட்டி-இளம்பிள்ளை சாலையில் டூவீலரில் வந்த முதியவர் மீது பிக்கப் வேன் மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை மீட்ட அங்கிருந்தவர்கள், அரியானூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ஆட்டையாம்பட்டி எஸ்ஐ தேவிமரியசெல்வம் நடத்திய  விசாரணையில், வேன் மோதி இறந்தவர் கல்பாரப்பட்டி சேவாம்பாளையத்தை சேர்ந்த கந்தசாமி(60) என்பதும், இவர் கசாப்பு கடைகளில் கறி அறுக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : blacksmith worker ,
× RELATED கிளி வளர்த்த 3பேருக்கு ₹15 ஆயிரம் அபராதம்