கெங்கவல்லி, ஜன.10: கெங்கவல்லி பேரூராட்சியில் நான்கு ரோடு சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். கெங்கவல்லி கடைவீதி நான்கு ரோடு சந்திப்பில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும அவதியடைகின்றனர். இப்பகுதி நான்கு ரோடு சந்திப்பு என்பதால் நாலாபுறமும் செல்லும் வாகனங்கள் ஒருவருக்கொருவரை முந்திக் கொண்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கெங்கவல்லி வழியாக பெரம்பலூர், அரியலூர், கும்பகோணம், தம்மம்பட்டி, துறையூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் பஸ்கள் இயக்கப்படுகிறது. எனவே, கெங்கவல்லி போலீசார் போக்குவரத்தை சீர்படுத்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, போக்குவரத்தை சீரமைத்து நெரிசலை குறைக்க முடியும்,’ என்றனர்.