×

இரட்டை குழந்தைகளின் தாய் தற்கொலை

சேந்தமங்கலம்,  ஜன.10: புதன்சந்தை அருகே, குழந்தைகளின் பால் பாட்டிலுக்கான ரப்பரை, கணவன்  வாங்கி தராததால் மனமுடைந்த இரட்டை குழந்தைகளின் தாய், தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை  அடுத்துள்ள ஏ.உடுப்பம் அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (35).  இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி கௌசல்யா (30).  இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஸ்ரீஹரி, ஸ்ரீஜா என இரட்டை குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில் கடந்த 4 நாட்களாக கௌசல்யா குழந்தைகளின் பால் பாட்டிலில்  பொருத்தப்படும் ரப்பரை வாங்கி வருமாறு கூறியுள்ளார். ஆனால், பாலமுருகன்  வாங்கி வரவில்லை. இதனால் கணவன்- மனைவி இடையே நேற்று முன்தினம் தகராறு  ஏற்பட்டது. இதனால், பாலமுருகன் மனைவியை திட்டிவிட்டு லாரியை எடுத்து கொண்டு  வெளியூர் சென்றுவிட்டார். இதில் மனமுடைந்து காணப்பட்ட கௌசல்யா, வீட்டில்  யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து  புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Mother suicide ,children ,
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...