ஓசூர், ஜன.10: ஓசூரில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஓசூர் ரஜினி மக்கள் மன்றம் சார்பில், மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் ஓசூரில் 4 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. ரசிகர்கள் பேனர் வைத்து அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பிறகு 7 பானைகள் வைத்து (தர்பார்) சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. காலை , மதியமும் படம் பார்க்க வந்தவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் 27 திருநங்கைகளுக்கு சீர் வரிசைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர செயலாளர் பாண்டியன், சத்யா ஆர்ட்ஸ் சத்திய நாராயணன், ஒன்றிய செயலாளர் மஞ்சுநாதன், ஒன்றிய இணைச்செயலாளர் முருகன், சுதாகர், நகர இணைச் செயலாளர் குமார் சத்யா ஆர்ட்ஸ், மற்றும் துணை செயலாளர்கள் திருவரங்கம், மணிகண்டன், சீனி, ஒன்றிய துணைச்செயலாளர்கள் மஞ்சு, ரமேஷ், மாவட்ட இணைச்செயலாளர் சரவணன், நகர வர்த்தக அணி இணைச் செயலாளர் வெங்கடேஷ் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.