×

வங்கியில் செல்போன் திருடிய பெண் கைது

கிருஷ்ணகிரி, ஜன.10:  காவேரிப்பட்டணம் அடுத்த தாம்சன்பேட்டையை சேர்ந்தவர் சுரேந்திரன்(21). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு சென்றார்.  அப்போது, தனது செல்போனை அருகே வைத்து விட்டு, பணம் செலுத்துவதற்காக சலானில் எழுதி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளம்பெண் ஒருவர், சுரேந்திரன் வைத்திருந்த செல்போனை திருடிக் கொண்டு தப்பிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சுரேந்திரன், அந்த பெண்ணை கையும், களவுமாக பிடித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ஒப்படைத்தார். அந்த பெண்ணிடம் எஸ்எஸ்ஐ ஜெகநாதன் விசாரணை நடத்தினார். அதில், அவர் தர்மபுரி மாவட்டம் ஒட்டப்பட்டியை சேர்ந்த கமல் மனைவி கமலி(21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்  அடைத்தனர்.

Tags :
× RELATED வாக்குப்பதிவு குறைந்த பகுதியில் அதிகாரிகள் விழிப்புணர்வு