×

கட்டிட பணியின்போது மயங்கி விழுந்த வாலிபர் சாவு

தர்மபுரி, ஜன.10: சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த எட்டியம்பட்டியை சேர்ந்தவர் தர்மன். இவரது மகன் ஜெகன்குமார்(20). சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் வேலை செய்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல், காலை உணவை முடித்து கொண்டு பணிக்கு திரும்பினார். அப்போது, பணியில் இருக்கும் போது திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, கன்னங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : death ,building ,
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு