×

கிருஷ்ணகிரி நகரில் உயிர் பலிக்கு காத்திருக்கும் உடைந்த கல்வெட்டுகள்

கிருஷ்ணகிரி, ஜன.10:  கிருஷ்ணகிரி நகரில் பல்வேறு இடங்களில் கல்வெட்டுகள் உடைந்து, உயிர் பலி வாங்க காத்திருக்கின்றன. கிருஷ்ணகிரி நகரில் ஆங்காங்கே சாலைகள், தெருக்கள் இணைக்கும் இடங்களில் கல்வெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்ட கல்வெட்டுகளில் பல இடங்களில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து தற்போது அதில் உள்ள இரும்பு கம்பிகள் மட்டுமே தெரிந்தபடி உள்ளது. இதனால் புதியதாக வருபவர்கள், இரவு நேரங்களில் வருபவர்கள் குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அந்த உடைந்த கல்வெட்டில் மோதி காயம் அடைகின்றனர். இது குறித்து பொதுமக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும், எந்த ஒரு கல்வெட்டும் சீர்செய்யப்படாமல் உள்ளது.இந்நிலையில், கிருஷ்ணகிரி நகராட்சி வார்டு எண்.31ல் உள்ள ஜக்கப்பன் நகர் 8வது கிராஸில் ராஜகாளியம்மன் கோயில் அருகில் உள்ள ஒரு கல்வெட்டு உடைந்து, மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது. இதே போல், பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக தோண்டப்பட்டு, மூடப்பட்டு தார் சாலை அமைக்கப்பட்ட இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கோ-ஆப்ரேட்டிவ் காலனி இரண்டாவது குறுக்கு தெருவில் இந்த அவல நிலை உள்ளது. எனவே, உயிர்பலி வாங்க காத்திருக்கும் இந்த கல்வெட்டுகளை சீர்செய்ய, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Krishnagiri ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்