×

ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா

உடுமலை, ஜன. 10: உடுமலை அருகே உள்ள மலையாண்டி பட்டணம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் 343-வது ஆண்டு ஏகாதசி விழா கடந்த 5-ம் தேதி மாலை அம்மன் கும்ப கலஸ்தான சக்தி அழைப்பு பூஜையுடன் துவங்கியது. கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 2ம் நாள் பிற்பகல் 3 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும்,தொடர்ந்து சவுடேஸ்வரி அம்மன் மகளிர் அணி சார்பில் திருவிளக்கு பூஜையும், திண்டுக்கல் சக்திவேல் குழுவினரின் சதாரம் புரான நாடகமும் நடத்தப்பட்டது. நேற்று இரவு பஜனை நடந்தது. இன்று (10-ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செட்டுமை தெண்டபாணி செட்டியார் பெரிய தனம் லட்சுமிபதி செட்டியார் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Tags : Vaikunda Ekadasi Festival ,Ramalinga Saudeswari Amman Temple ,
× RELATED ஸ்ரீ ரங்கம் கோயிலில் இன்று...