×

திருப்பூரில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு சுக பிரசவம்

திருப்பூர், ஜன.10:திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு பாறைக்குழி பகுதியில் வசித்து வருபவர் சஞ்சய்குமார். இவரது மனைவி உஷா நிறைமாத கர்ப்பிணி. அவருக்கு நேற்று காலை 7 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது உடனடியாக 108 ஆம்புலன்ஸ் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருப்பூர் பழைய மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிறைமாத கர்ப்பிணியான உஷாவை மருத்துவமனை அழைத்து சென்றனர். சிறிது தூரம் ஆம்புலன்ஸ் சென்றபோது, அவருக்கு பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து ஆம்புலன்சை டிரைவர் கார்த்திக் ஓரமாக நிறுத்தினார். மருத்துவ உதவியாளர் பாண்டியம்மாள் பிரசவம் பார்த்தார். இதில் உஷாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயையும், குழந்தையையும் மருத்துவமனையில் சேர்த்தனர். துரித நேரத்தில் செயல்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் கார்த்திக் மற்றும் மருத்துவ உதவியாளர் பாண்டியம்மாளை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

Tags : Tirupur ,
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்