×

வீட்டு காம்பவுண்டுக்குள் காய போட்டிருந்த போர்வை திருட்டு

அவிநாசி, ஜன.10: அவிநாசி போலீஸ் டி.எஸ்பி. அலுவலகம் அருகே உள்ள வீட்டின் சுவரின் மீது ஏறிக் குதித்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரின் வீடியோ காட்சியால் அவிநாசியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவிநாசி-கோவை தேசிய நெடுஞ்சாலை நாயக்கன் தோட்டம் அருகே அவிநாசி போலீஸ் டி.எஸ்பி. அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு பின்புறம் சுந்தரம் (44) என்பவர் வசித்து வருகிறார். இவர் அவிநாசியில் கைகாட்டிப் புதூரில் நூல் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில், இவரது வீட்டின் பின்புற பகுதியில் ஒரு மர்ம நபர் ஒருவர் சுற்றுச்சுவரின் மீது ஏறி வீட்டுக்குள் குதித்துள்ளார். பின்னர் வீட்டில் ஆட்கள் உள்ளதை அறிந்த அவர், அங்கு காய வைக்கப்பட்டிருந்த போர்வைகளை திருடிச் சென்றுள்ளார். மர்ம நபர் வீட்டுக்குள் குதிக்கும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது, இந்த வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Theft ,
× RELATED தமிழகத்தில் இரண்டு நாளில் சிலை கடத்திய 11 பேர் கைது