×

வரும் 12ல் ஊட்டியில் எஸ்.ஐ. எழுத்து தேர்வு

ஊட்டி, ஜன.10: நீலகிரி மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு வரும் 12, 13 ஆகிய தேதிகளில் ஊட்டி அரசு கலை கல்லூரியில் நடக்கிறது.  நீலகிரி மாவட்ட எஸ்பி. சசிேமாகன் கூறியிருப்பதாவது:நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு ஊட்டி அரசு கலை கல்லூரியில் நடைபெற உள்ளது. பொது விண்ணப்பதாரர்கள் ஆண்கள் 597 பேரும் பெண்கள் 82 பேரும் என மொத்தம் 679 பேர் வரும் 12ம் தேதி காைல 10 மணிக்கு எழுத்து தேர்வு எழுதுகின்றனர். 13ம்ேததி துறை சார்ந்த 66 பேரும் எழுத்து தேர்வு எழுதுகின்றனர்.
இத்தேர்விற்கு அழைப்பு கடிதம் பெறப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு தினத்தன்று காலை 9 மணிக்குள் கல்லூரிக்கு வர வேண்டும். விண்ணப்பதாரர்கள் அழைப்பு கடிதம், அடையாள அட்ைட மற்றும் நீலம், கருப்பு நில பந்து முனை பேனா எடுத்து வர வேண்டும். தேவையெனில் எழுது பொருட்களால் எழுதப்படாத மற்றும் வரையப்படாத எழுதுபலகை அனுமதிக்கப்படும். கை பை, செல்போன் மற்றும் கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் கருவிகளையும் எடுத்து வர அனுமதியில்லை. அரசு கலை கல்லூரி மைதானத்தில் வாகனங்கள் நிறுத்த போதிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மேலும் அழைப்பு கடிதத்தில் உள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறு தேர்வாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வாளர்களுடன் வேறு எந்த நபரையும் தேர்வு மையத்திற்குள் அழைத்துவரக்கூடாது, தேர்வு நாளன்று 10.15 மணிக்கு ேமல் தேர்வு மையத்திற்கு வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கபடமாட்டார்கள். ஆள் மாறாட்டம் மற்றும் ஏதேனும் முறைகேடுகள் கண்டறிந்தால் தேர்வு எழுத அனுமதி மறுப்பதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும். இவ்வாறு எஸ்பி. சசிமோகன் தெரிவித்துள்ளார்.

Tags : SI ,Ooty ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...