×

குந்தலாடி பெக்கி ஆற்றில் தண்ணீர் திருட்டு

பந்தலூர், ஜன.10: பந்தலூர் அருகே குந்தலாடி பெக்கி ஆற்றில் இருந்து அனுமதி இல்லாமல் வாகனங்கள் மூலம் தண்ணீர் திருடுவது தொடர்கதையாகியுள்ளது.  பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சி குந்தலாடி அருகே பெக்கி ஆறு உள்ளது. இந்த ஆற்று தண்ணீரை இப்பகுதி பொதுமக்கள் குடிநீர் தேவைக்கும்  விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆற்றில் அண்மைக்காலமாக சிலர் வருவாய்த்துறையினர் அனுமதியில்லாமல் லாரி, டிராக்டர் போன்ற வாகன மூலம் தண்ணீர் திருடி செல்வது தொடர்கதையாக உள்ளது. நேற்று கேரளா பதிவெண் கொண்ட ஜீப் ஒன்று உள்ளே ட்ரம் வைத்து வருவாய்த்துறை அனுமதியில்லாமல் தண்ணீர் திருடி சென்றனர். நாள் ஒன்றுக்கு நான்கு, ஐந்து முறை பேரல்களை ஜீப்பில் வைத்து தண்ணீர் நிரப்பி எடுத்து செல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதை சில அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கோடை காலம் நெருங்குவதால் சுற்று வட்டார பகுதிகளில் தண்ணீர் தட்டுபாடு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் அதிகாரிகள் தண்ணீர் திருட்டை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Kundaladi Becky River ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...