×

வீட்டில் விபசாரம் புரோக்கர் 2 பேர் கைது

கோவை, ஜன.10: கோவை துடியலூரிலிருந்து சரவணம்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு வாடகைக்கு வீடு எடுத்து 2 பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்தது. இது தொடர்பாக ஆத்தூர் அருகே உள்ள சீலியம்பட்டியை சேர்ந்த புரோக்கர்கள் வேலுமணி (52), அன்னதானபட்டியை சேர்ந்த சதீஸ்குமார்(20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய சேலத்தை சேர்ந்த செல்வம் என்பவரை தேடி வருகின்றனர். விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

Tags :
× RELATED டோல்கேட் அவசரகால வழி வசூல் மையத்தை அகற்ற வேண்டும்