×

அம்பத்தூரில் அடகு கடை உடைத்து நகை, பணம் கொள்ளை

ஆவடி, ஜன.10: அம்பத்தூரில் நள்ளிரவில் அடகு கடையின் ஷட்டரை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.அம்பத்தூர், ஞானமூர்த்தி நகர், பெரியார் சாலையை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (42). இவர் வீட்டு முன் பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரமேஷ்குமார் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர், அவர் நேற்று காலை கடையை திறக்க வந்தார்.

அப்போது, அவரது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாப் பெட்டியில் இருந்த ₹29ஆயிரம் பணம், 4 சவரன் நகைகள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் பெரியதுரை தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலீசார் கண்காணிப்பு கேமரா உதவியுடன் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...