×

பொன்னேரி அருகே செங்கல் லாரி கவிழ்ந்து வாலிபர் பலி

பொன்னேரி, ஜன. 10 : பொன்னேரி அருகே செங்கல் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் இருந்த  வாலிபர் பலியானார். டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தில் ஒரு செங்கல் சூளை உள்ளது. இங்கு ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். நேற்று மதியம் செங்கல் ஏற்றிக்கொண்டு மினி லாரி புறப்பட்டது. கம்மவார்பாளையம் அருகே வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது.  இதில் லாரியின் அடியில் சிக்கி ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த சைத்தான் பிசி (30) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். டிரைவர் அண்ணாமலை மற்றும் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக் கப்பட்டார். தகவல் அறிந்ததும் பொன்னேரி போலீசார் சம்பவ இடம் சென்று விபத்தில் இறந்த சைத்தான்பிசி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Ponneri ,
× RELATED பொன்னேரி அருகே பேருந்தை சிறை பிடித்து பெண்கள் சாலைமறியல்