×

கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

திருப்போரூர், ஜன. 10: மத்திய அரசின் குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரியும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் மீது  தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், சிறுசேரியில் செயல்பட்டு வரும் முகம்மது சதக் அறக்கட்டளை ஏ.ஜெ.பொறியியல்  கல்லூரி மாணவர்கள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பாக அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து தாழம்பூர் போலீஸ்  இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் அங்கு வந்து மாணவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். சிறிது நேரம் கழித்து மாணவர்கள் போராட்டத்தை  கைவிட்டு கலைந்து சென்றனர்.


Tags : College students ,
× RELATED ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம்...