திருப்போரூர், ஜன. 10: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ₹41 லட்சத்து 49 ஆயிரத்து 97 ரொக்கம், 363 கிராம் தங்கம், 3010 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்களால் போடப்பட்டு இருந்தது. திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை பணம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எண்ணப்படுகிறது.அதன்படி நேற்று கோயில் வளாகத்தில் உள்ள 7 உண்டியல்கள் இந்து அறநிலையத் துறை காஞ்சிபுரம் உதவி ஆணையர் ரேணுகாதேவி, செயல் அலுவலர் சக்திவேல், ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.இதில் ₹41 லட்சத்து 49 ஆயிரத்து 97 ரொக்கம், 363 கிராம் தங்கம், 3010 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்களால் போடப்பட்டு இருந்தது. உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பக்தர்கள், பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர்.