×

ஊதியம் வழங்காததால் ஆத்திரம் சூப்பர் மார்க்கெட்டில் டிவியை உடைத்த விற்பனையாளர் கைது

திருவொற்றியூர், ஜன.10: சென்னை ஓட்டேரி ஜமாலியா ஆபீசர் காலனியை சேர்ந்தவர் முகமது சாதிக் (24). மாதவரம் மேம்பாலம் அருகே உள்ள பிரபல தனியார் சூப்பர் மார்க்கெட்டில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு  கடந்த சில மாதங்களாக சம்பளம்  வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து நிர்வாகத்திடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்த முகமது சாதிக், சம்பளம் கேட்டு மேலாளரிடம் தகராறு செய்துள்ளார். பின்னர், ஆத்திரமடைந்து அங்கிருந்த விலை உயர்ந்த டிவியை அடித்து உடைத்துள்ளார். இதுகுறித்து சூப்பர்மார்க்கெட் மேலாளர் அசோக், மாதவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது சாதிக்கை கைது செய்தனர்.

Tags : Vendor ,rage supermarket ,
× RELATED சாலையோர வியாபாரிகள் பிரச்னைகளுக்கு தீர்வு