விராலிமலை, ஜன.10: வட்டார கல்வி அலுவலகத்தின் நிர்வாக சீட்கேட்டை கண்டித்து ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உள்ளிருப்பு ேபாராட்டம் நடைபெற்றது.விராலிமலை வட்டார கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுருத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். விராலிமலை வட்டார கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த உள்ளிருப்பு போராட்டத்திற்கு வட்டார செயலாளர் ஜான் சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார். இதில் விராலிமலை வட்டார கல்வி அலுவலர் பணியிடம் 18 மாதங்களாக காலியாக உள்ளது. அந்த பணியிடத்தை உடன் நிரப்பவேண்டும்.
3 வருடங்களாக வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களை உடன் வழங்க வேண்டும். பணபலன்கள் பாகுபாடின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும். வட்டார கல்வி அலுவலகத்தில் உள்ள நிர்வாக சீர்கேட்டை ஒழுங்குபடுத்த வேண்டும். 2018ம் ஆண்டு பதவி உயர்வில் சென்ற ஆசிரியர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் வின்சென்ட். வட்டார பொருளாளர் சிவசுப்பிரமணியன் உள்பட திரளான தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.