×

பெரம்பலூர் அடுத்த குரும்பலூரில் தீக்குளித்த முதாட்டி சிகிச்சை பலனின்றி சாவு

பெரம்பலூர், ஜன.10: பெரம்பலூர் அருகே குரும்பலூரில் தீக்குளித்து தற்கொ லைக்கு முயன்றவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.பெரம்பலூர் தாலுகா, குரும்பலூர் சிவன்கோயில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மனைவி ரத்தினம்(70). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர் ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (8ம் தேதி) காலை 5 மணியளவில் ரத்தினம் தன் மீதுமண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.இதையறிந்து அக்கம்பக் கத்தினர் ரத்தினத்தை மீட் டு சிகிச்சைக்காக பெரம்ப லூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்றி நேற்று ரத்தினம் இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூ ர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Perambalur ,Mutti ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...