×

நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது ஆந்திராவில் இருந்து தஞ்சைக்கு ரயிலில் 3,500 டன் அரிசி வந்தது

தஞ்சை, ஜன. 10: ஆந்திராவில் இருந்து தஞ்சைக்கு சரக்கு ரயிலில் பொது விநியோக திட்டத்தின்கீழ் 3,500டன் பச்சரிசி வந்தது.தஞ்சை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பொது விநியோக திட்டத்தின்கீழ் பச்சரிசி, புழுங்கல் அரிசி உள்ளிட்டவை வெளிமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது வழக்கம். அதன்படி நேற்று ஆந்திராவில் இருந்து 3,500 டன் பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி சரக்கு ரயிலில் தஞ்சை ரயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் அரிசி மூட்டைகள் பொது விநியோக திட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags : Andhra ,
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்