×

வர்த்தகர்கள் அறிவிப்பு உர கடைகளின் உரிமங்களை காலாவதி தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும்

பாபநாசம், ஜன. 10: பாபநாசம் அருகே அம்மாப்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உரம், பூச்சி மருந்து விற்பனையாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.அம்மாப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் சுஜாதா பேசும்போது, உர விற்பனை நிலையங்களில் உள்ள உண்மையான இருப்பும், புத்தக இருப்பும், பிஓஎஸ் மெஷினில் உள்ள இருப்பும் ஒத்துப்போக வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் உர மானியம் விடுவிக்க இயலாது. உரிமங்களை காலாவதி தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும். பூச்சி மருந்துகள் விற்கும்போது விவசாயிகளுக்கு தகுந்த முன்னெச்சரிக்கைகளை கூறி விற்பனை செய்ய வேண்டும். அவர்கள் உரிமம் பெற்றிருக்கும் நிறுவன பூச்சி மருந்துகள் தவிர மற்ற மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என்றார். இதில் உர விற்பனை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

Tags : Traders ,fertilizer stores ,
× RELATED ரூ 457.76 கோடி தவறான உள்ளீட்டு வரி 151...