வேதாரண்யம், ஜன.10: வேதாரண்யம் ஆதனூரில் ஊராட்சி மன்ற தலைவராக சந்திரா பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அண்டர்காட்டில் உள்ள சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கு குடை மற்றும் நோட்டுபுத்தகங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பள்ளி ஆசிரியர் வசந்தா வரவேற்றார். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நன்கொடையாக வழங்கிய குடை, துண்டு, எழுதுபொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் சந்திராவழங்கினார். நிகழ்ச்சியில் இலக்கியதாசன் உள்ளிட்ட பள்ளிஆசிரிய-ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், கிராமமக்கள் கலந்து கொண்டனர்.